தொடங்கியது தலைவரின் 170-வது திரைப்படத்தின் ஷூட்டிங்

நடிகர் ரஜினிகாந்தின் 170-வது திரைப்படத்தின் பூஜை நடைபெற்றது. இதற்கான ஷூட்டிங்கும் தொடங்கிவிட்டதாக லைக்கா நிறுவனம் தெரிவித்தது.

இந்த படத்தை  இயக்குநர் ஞானவேல் இயக்க உள்ளார். லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்க உள்ளார்.

துஷாரா விஜயன், ரித்திகா சிங், ராணா டகுபதி, மஞ்சு வாரியர் மற்றும் பஹத் பாசில், அமிதாப் பச்சன் ஆகிய முன்னணி நடிகர்கள் இதில் நடிக்க உள்ளதாக லைக்கா நிறுவனம் அப்டேட் மேல் அப்டேட்டை அடுக்கியது. இது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

ரஜினிகாந்தின் முந்தைய படமான ஜெயிலர் வசூல் ரீதியாக வெற்றியை தந்ததோடு ரசிகர்கள் மத்தியிலும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியது. அந்த படத்தை போன்று இதிலும் முன்னணி நடிகர்கள் பலர் நடிக்க இருப்பது பெரும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.