வி.எல்.பி. மாணவி சர்வதேச தடகள போட்டியில் அசத்தல் 

வி.எல்.பி. ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவி ஜெயவிந்தியா சர்வதேச அளவில் நடைபெற்ற தடகள போட்டியில் தனது திறமையை வெளிப்படுத்தினார்.

பிபிஏ (சிஏ) இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி ஜெயவிந்தியா  ஏப்ரல் 24 முதல் 27 வரை  துபாயில் (2024) நடைபெற்ற ஜூனியர் ஆசிய தடகள சாம்பியன்ஸிப்பில் சர்வதேச அளவில் தனது தடகளத் திறமையை வெளிப்படுத்தினார்.

கண்டம் முழுவதும் இருந்து சிறந்த இளம் விளையாட்டு வீரர்கள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயவிந்தியா 400 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டத்தில் பங்கேற்று ஆறாவது இடத்தை பிடித்துள்ளார். இவரின் வெற்றி கல்லூரி மட்டுமல்லாமல் நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளது.

கல்லூரி நிர்வாகம், முதல்வர், உடற் கல்வித்துறை இயக்குநர், துறைத் தலைவர் உள்ளிட்ட பேராசிரியர்கள் அனைவரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.