‘தடையின்றி குடிநீர் விநியோகம்’ -அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம்

கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டத்திற்குட்பட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் கோடை காலங்களில் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பான அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன், தலைமையில் நடைபெற்றது. இதில், கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார், கிரியப்பனவர் மற்றும் ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.