எஸ்.என்.எஸ் இன்ஸ்டிட்யூஷன்ஸ் சார்பில் கைப்பந்து போட்டி

எஸ்.என்.எஸ் இன்ஸ்டிட்யூஷன்ஸின் ஸ்பெய்ன். தி ஸ்டுடென்ட்ஸ் டெலெண்ட் ஆக்டிவிட்டி சென்டர் சார்பில் கோவை மாவட்ட அளவில் பள்ளிகளுக்கிடையேயான கைப்பந்து போட்டியை நடத்தியது. இப்போட்டியினை எஸ்.என்.எஸ் செவிலியர் கல்லூரி முதல்வர் கவிதா தொடங்கி வைத்தார். இதில் ஆண்கள் பிரிவில் 16 அணியினரும், பெண்கள் பிரிவில் 6 அணியினரும் கலந்து கொண்டனர். வெற்றிபெற்ற அணிகளுக்கு எஸ்.என்.எஸ். பார்மசி கல்லூரி முதல்வர் சதிஷ்குமார் மற்றும் எஸ்.என்.எஸ். இன்ஸ்டிட்யூஷன்ஸின் உடற்கல்வி இயக்குனர்கள், பயற்சியாளர்கள் பரிசுகளை வழங்கினார்கள்.