மத்திய சிறைச்சாலை நூலகத்திற்கு புத்தகங்கள் நன்கொடை

சிறைக் கைதிகளின் சிந்தனையைச் சீர்படுத்தவும், அவர்களது தனிமையைப் போக்கவும், வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தவும் உதவும் நண்பன் புத்தகங்கள்.

இந்நிலையில், உலக புத்தக தினத்தை முன்னிட்டு கோவை காந்திபுரத்தில் உள்ள மத்திய சிறைச்சாலை நூலகத்திற்கு எழுத்தாளர் கனலி (எ) சுப்பு எழுதி, ஹெர் ஸ்டோரீஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?.. உடைத்துப் பேசுவோம் மற்றும் அவள்..அவன்.. மேக்கப் ஆகிய இரு நூல்கள் மற்றும் அப்துல் கலாம் புத்தகம் ஆகியவை மத்திய சிறைச்சாலை நூலகத்திற்கு வழங்கப்பட்டது.

சிறைத் துறை காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமாரிடம் அகில இந்திய ரியல் எஸ்டேட் சங்கத்தின் கூட்டமைப்பின் தேசிய செயல் செயலாளரும்,நேரு நகர் லயன்ஸ் சங்கத்தைச் சார்ந்த எம்.ஜே.எப் லயன் எஸ். செந்தில் குமார் மற்றும் எழுத்தாளர் கனலி ஆகியோர் இணைந்து புத்தகங்களை வழங்கினர்.