முதன்மை அமைப்பாக உருவெடுக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்

டாக்டர் என்.ஜி.பி தொழில்நுட்ப கல்லூரியின் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை சார்பில் சிஐஐ – ஒய்ஐ யுவா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கம், வளர்ந்த தேசத்தின் கனவை நனவாக்குவதற்காக இளம் இந்தியர்களுக்கு ஒரு தளத்தை உருவாக்குவது மற்றும் இந்தியாவின் பிரச்னைகளைத் தீர்ப்பதில் தொடர்புடைய தளங்களில் குரல் கொடுக்கும் முதன்மையான இந்திய இளைஞர் அமைப்பாக உருவெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

என்.ஜி.பி கல்வி குழுமங்களின் செயலர் டாக்டர் தவமணி பழனிசாமி, ஐஜெனியூன் லெர்னிங் நிறுவன இயக்குநர் சம்யுக்தா மனோகரன் சேர்ந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் பரிமாறிக் கொண்டார். நிகழ்வில், கல்லூரியின் முதல்வர் பிரபா மற்றும் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைத்தலைவர் கதிர்வேல் ஆகியோர் பங்கேற்றனர்.