கோடை வெப்பத்தை தணிக்க பாஜக சார்பில் நீர் மோர் பந்தல்

கோடை வெப்பத்தை தணிக்கவும், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவை பாஜக சார்பில் ராம் நகர் பகுதியில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதனை கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், பாஜக மகளிர் அணி தேசிய தலைவருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கி துவக்கி வைத்தார். மேலும், கோவை சாய் பாபா காலனி கங்கா மருத்துவமனை அருகில் ரூ.12.82 மதிப்பீட்டில் பேருந்து நிழற்குடை அமைக்கும் பணியினை பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வுகளில் ராம் நகர் மண்டல தலைவர் விஷ்ருதா, துணைத்தலைவர் ராம்குமார், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட செயலாளர் தீன தயாளன், காட்டூர் சின்னா என்ற பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.