சங்கரா கல்லூரியின் நாட்டு நலப் பணித்திட்ட சிறப்பு முகாம் துவக்கவிழா

சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சிறப்பு முகாம் அண்மையில் குன்னத்தூரில் உள்ள அருள்மிகு பழனி ஆண்டவர் திருக்கோவில் மண்டபத்தில் நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் (அலகு-1) பாரத் வரவேற்புரை ஆற்றினார். சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியின் துணை முதல்வர் பெர்னார்ட் எட்வர்ட் வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக, கவிஞர் தர்மலிங்கம் கலந்து கொண்டு தமதுரையில் ஊரின் பெருமைகளையும், மண்ணின் மகத்துவத்தையும் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சிறப்புகளையும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

நாட்டு நலப்பணித் திட்டத்தின் அலுவலர் (அலகு -2) இராமச்சந்திரன் 7 நாட்களுக்கான சிறப்பு முகாமின் செயல்பாட்டு பணிகளை பற்றி விளக்கினார். நாட்டு நலப்பணித் திட்டத்தின் உறுப்பினர் சசிகலா நன்றியுரை ஆற்றினார்.