ரூ.90 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்-சுங்கவரித்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை 

கோவை விமான நிலையத்திற்கு நாள்தோறும் 20-ற்கும் மேற்பட்ட விமானங்கள் வந்து செல்கின்றன.இந்நிலையில்,சிங்கப்பூரிலிருந்து தங்கக் கட்டிகள்கடத்தி கோவைக்கு கொண்டுவருவதாக சுங்கவரித்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்துள்ளது.இதையடுத்து, காவல்துறையினர் பயணிகளிடம் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.சோதனையில்,ஒரு பயணி மட்டும் முரணாக பேசி வாக்குவாதம் மேற்கொண்டார்.இதன் அடிப்படியில் அந்த நபரை காவலர்கள் தனியாக அழைத்து சென்று கொண்டு  உடைமைகளை சோதனை செய்தார்கள்.விசாரணையின் போது , அவர் கொண்டு வந்த பையில்  தங்க கட்டிகள் மற்றும் தங்க செயின்இருப்பது தெரியவந்துள்ளது.1 கிலோ 220 கிராம் எடை கொண்ட 10 தங்க கட்டிகள் மற்றும் தங்க செயின் பறிமுதல் செய்யப்பட்டன மற்றும் அதன் மதிப்பு 90 லட்சத்து 28 ஆயிரம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.மேலும்,தங்கம் கடத்தல் தொடர்பான விசாரணை குற்றவாளியிடம் நடத்தப்பட்டு வருகிறது.