இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி கணினி அறிவியல் மற்றும் அறிவாற்றல் துறையானது டாடா கன்சல்டன்சி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
நிகழ்வில் டாடா கன்சல்டன்சி அமைப்பின் தலைவர் கே.எம்.சுசீந்திரன் மற்றும் நிறுவனத்தின் மண்டலத் தலைவர் ஸ்டீபன் தினகரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இதில் கல்லூரியின் செயலாளர் சரஸ்வதி கண்ணையன் மற்றும் நிர்வாக செயலாளர் பிரியா சதீஷ், கல்லூரி முதல்வர் பொன்னுசாமி, கணினி அறிவியல் மற்றும் அறிவாற்றல் துறைத் தலைவர் சசிகலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.