இயல்பு நீர் சேகரிப்பு நிலையம்

கோயம்புத்தூர் மாவட்டம் பவானி ஆற்றினை நீராதாரமாக கொண்ட பில்லூர் -IIIல், ரூ.779.86 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் குடிநீர் திட்டத்தின் ஒருபகுதியாக மருதூர் ஊராட்சி, தண்டிப்பெருமாள்புரம் பகுதியில் ரூ.104.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 178 MLD கொள்ளளவு கொண்ட இயல்பு நீர் சேகரிப்பு நிலையத்தில் இரண்டாம் கட்ட சுத்த நீர் சோதனை ஓட்டம் (மருதூர் முதல் பன்னிமடை பிரதான நீர்தேக்கத்தொட்டி வரை) நடைபெற்று வருகிறது. அதனை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

உடன் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மண்டல தலைமை பொறியாளர் செல்லமுத்து, நிர்வாக பொறியாளர் செந்தில்குமார், உதவி நிர்வாக பொறியாளர்கள் தபட்டன், ராதா, ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.