திமுக இளைஞர் அணி மாநாட்டிற்கு நிதி வழங்கிய நா.கார்த்திக்

திமுக இளைஞர் அணி 2வது மாநில மாநாட்டு நிதியாக, கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில், ரூபாய் ஒரு கோடியே நாற்பத்து ஆறாயிரம் (1,00,46,000)-ற்கான வரைவோலையை(DD) திமுக செயலாளர் நா.கார்த்திக், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினார்.

அத்துடன், கோவை மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட 350 கழக உறுப்பினர்களின் முரசொலி ஆண்டு சந்தா தொகையாக ரூபாய் ஆறு இலட்சத்து முப்பதாயிரம் (6,30,000)ற்கான வரைவோலையையும் (DD) வழங்கினார்.