வருங்கால அரசியல் இளைஞர்களின் கையில் – கே.பி.ஆர் கல்லூரியில் திமுக எம்.எல்.ஏ பேச்சு

கோவை கே.பி.ஆர்., பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் “தேசிய இளம் பாராளுமன்றத் திட்டம் சார்பாக” வாய்ஸ் ஆப் ப்ரைன்ஸ் (voice of brains) என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது .

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு கே செல்வராஜ் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார், அவர் கூறுகையில் தேசிய தலைவர்கள் வரலாற்று புத்தகங்களை படிப்பதன் மூலம் மாணவர்கள் சீறும் சிறப்புமாக வாழ்க்கையை முன்னெடுத்த முடியும் என்று குறிப்பிட்டார் .

மேலும் அவர் மாணவர்களிடையே கலந்துரையாடும் போது சட்டமன்ற, பாராளுமன்ற அவைகளின் நடவடிக்கைகள் குறித்து மாணவர்கள் கேள்விக்கு சிறப்பாக பதில் அளித்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் மு அகிலா அவர்கள் தலைமை தாங்கினார்.