கே.ஐ.டி கல்லூரியில் ஆண்டு விழா

கோவை கண்ணம்பாளையத்தில் உள்ள கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியின் (கே.ஐ.டி) “15 ஆம் ஆண்டு விழா” கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கல்லூரியின் நிறுவனத் தலைவர் பொங்கலூர் நா.பழனிச்சாமி கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளில் மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மாணவ மாணவியர்கள், பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய பேராசிரியர்கள் ஆகியோருக்கு சிறப்பு விருந்தினர் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டினார். மேலும் இவ்விழாவில் கல்லூரியின் முதல்வர் ரமேஷ் ஆண்டு அறிக்கையை வாசித்தார். இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் துணைத் தலைவர் இந்து முருகேசன், கல்லூரி டீன்கள், பல்வேறு துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.