செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆன கௌஸ்தவ் சட்டர்ஜி..!

கொல்கத்தாவைச் சேர்ந்த 19 வயதான செஸ் வீரர் கௌஸ்தாவ் சட்டர்ஜி இந்தியாவின் 78-வது கிராண்ட் மாஸ்டர் ஆக உருவெடுத்துள்ளார்.

ஒரே இடத்தில் அமர்ந்து மூளையை பயன்படுத்தி விளையாடும் செஸ் மற்ற போட்டிகளை காட்டிலும் கொஞ்சம் கடினமானது தான். கிராண்ட் மாஸ்டர் ஆக உருவாவது அவ்வளவு எளிதான காரியமல்ல.

கிராண்ட் மாஸ்டர் பட்டம் வெல்வது எப்படி?

சர்வதேச செஸ் கூட்டமைப்பின் கீழ் 2,500 புள்ளிகளை கடந்து, கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற 3 வீரர்களோடு, தொடர்ச்சியாக வெற்றி பெற்றால் மட்டுமே கிராண்ட் மாஸ்டர் வழங்கப்படும். அந்த வகையில் உலகம் முழுவதும் ஏராளமானோர் கிராண்ட் மாஸ்டர் பட்டங்களை வென்றுள்ள நிலையில், இந்தியாவில் மட்டும் 77 பேர் கிராண்ட் மாஸ்டர் ஆக உருவெடுத்துள்ளனர்.

அந்த வகையில் கொல்கத்தாவைச் சேர்ந்த 19 வயதான செஸ் வீரர் கௌஸ்தாவ் சட்டர்ஜி, இந்தியாவின் 78-வது கிராண்ட்மாஸ்டர் ஆக உருவெடுத்துள்ளார்.

59-வது தேசிய சீனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் மித்ரபாவுக்கு எதிரான ஆட்டத்தில் போராடி டிரா செய்ததன் மூலம் கிராண்ட்மாஸ்டருக்குரிய கடைசி தகுதிநிலையை அவர் எட்டினார்.

மேற்கு வங்காளத்தில் இருந்து உருவெடுத்த 10-வது கிராண்ட்மாஸ்டர் என்ற சிறப்பையும் கௌஸ்தவ் சாட்டர்ஜி பெற்றுள்ளார்.