இந்துஸ்தான் கல்லூரியில் பெண்களுக்கான கருத்தரங்கம்

இந்துஸ்தான் கல்விக் குழுமம் சார்பில் “தானியங்கு புரட்சியில் பெண்களுக்கான இடம்” எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்துறை ஆட்டோமேஷன் துறையில் பாலின சமத்துவம், பன்முகத் தன்மையை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு இந்நிகழ்வு அமைந்தது.

சிறப்பு விருந்தினர்களான யு.எஸ்.ஏ., யு.ஐ.-பாத்  உலகளாவிய துணைத் தலைவர் சங்கீதா நடராஜன், ஏ.பி.ஜே, யு.ஐ.-பாத் ராஜேஷ் ராஜகோபாலன் ஆகியோர் ஆட்டோமேஷன் துறையில் பெண்களின் பங்களிப்பு, செயற்கை நுண்ணறிவு குறித்து பேசினர்.

இந்துஸ்தான் கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் சரசுவதி கண்ணையன், செயலர் பிரியா சதீஷ், முதல்வர் பொன்னுசாமி ஆகியோர் தமது கருத்துக்களை வழங்கினர்.

இளம் பெண்களுக்கான செயற்கை நுண்ணறிவுத் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பாலினத்தை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர். பணியிடத்தில் சமத்துவம் மற்றும் அதிகாரமளித்தல் குறித்து கலந்துரையாடல் நடந்தது. மேலும், ஐ.சி.டி. அகாடமிக்கு சிறப்பு அங்கீகாரம் வழங்கப்பட்டது.

கார்ப்பரேட்கள் மற்றும் கல்விச் சமூகங்களில் செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆட்டோமேஷன் மூலம் பணியிடங்களில் பெண்களின் பங்களிப்பு பற்றி பேசினர்.