நரசிம்மபுரம் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் ”மக்களுடன் முதல்வர்” சிறப்பு முகாம்

கோவை தெற்கு மண்டலம் வார்டு எண்.92-க்குட்பட்ட குனியமுத்தூர், நரசிம்மபுரம் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் மக்களுடன் முதல்வர்” சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமினை பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்து, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.

இதில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், துணை மேயர் வெற்றிசெல்வன், நியமன குழு உறுப்பினர் ராஜேந்திரன், மாமன்ற உறுப்பினர் இளஞ்சேகரன், முன்னாள் தொண்டாமுத்தூர் பேரூராட்சி தலைவர் ரவி, பேரூர் வட்டாட்சியர் ஜோதிபாசு, உதவி ஆணையர் பிரேம் ஆனந்த் மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.