கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி உன்னத் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் ஊத்துபாளையம் கிராமத்திற்கு சூரிய மின் விளக்குளை வழங்கியது.
இதை கல்லூரியின் முதல்வர் சரவணன், செயலாளர் இராமசாமி, பேராசிரியர்கள், மற்றும் மாணவர்கள் இணைந்து கிராம மக்கள் முன்னிலையில் அரசூர் பஞ்சாயத்துத் தலைவர் மனோன்மணியிடம் வழங்கினர்.
மேலும் ஊத்துப்பாளையம் கிராமம் ‘புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்நுட்பத்தை செயல்படுத்துதல்’ என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு தத்து எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.