மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்காக புத்தகம் வெளியீடு

டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 2023-2024 ஆம் கல்வியாண்டில் முதலாமாண்டு படிக்கவிற்கும் மாணவர்களின் திறன் மேம்பாட்டிற்கான பிரத்தயேக புத்தகம் வெளியிடப்பட்டது. அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வாயிலாக, நாச்சிமுத்து தொழில் சங்கம் பிரிவு மூலம் புத்தகம் அச்சடிக்கப்பட்டது.

என்.ஐ.ஏ கல்வி நிறுவனத்தின் செயலர் முனைவர் இராமசாமி புத்தகத்தை வெளியிட முதல் பிரதியினை டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் முனைவர் கோவிந்தசாமி பெற்றுக்கொண்டார். இப்புத்தகங்கள் கல்லூரி வளாகத்தில் உள்ள புக் டிப்போவில் மாணவர்களுக்கு சலுகை விலையில் வழங்கப்படும். இந்நிகழ்வில், கல்லூரியின் முதல்வர், டீன்கள், துறைத்தலைவர், பேராசிரியர்கள், மக்கள் தொடர்பு அதிகாரி மற்றும் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.