கோவை மேயர் கல்பனா தலைமையில் மாமன்ற கூட்டம் !

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹால் கூட்டரங்கில் மாமன்ற உறுப்பினர்களின்  சாதாரணக் கூட்டம்  புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டமானது கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் நடந்தது. இதில் துணை மேயர் வெற்றிசெல்வன், துணை ஆணையாளர்கள் செல்வசுரபி, சிவகுமார், மண்டல குழுத்தலைவர்கள் கதிர்வேல் (வடக்கு), இலக்குமி இளஞ்செல்விகார்த்திக் (கிழக்கு), .தெய்வயானை தமிழ்மறை (மேற்கு), தனலட்சுமி (தெற்கு), மீனா லோகு (மத்தியம்), மாலதி நாகராஜ் (கல்வி & பூங்கா), ராஜேந்திரன் (நியமனக்குழு), நிலைக்குழுத் தலைவர்கள் தீபா தளபதி இளங்கோ (கணக்குகள்), சாந்தி முருகன் (பணிகள்), பி.முபசீரா (வரிவிதிப்பு & நிதி), சோமு (எ) சந்தோஷ் (நகரமைப்பு), மாரிசெல்வன் (பொது சுகாதாரம்), நிலைக்குழு உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மண்டல உதவி ஆணையர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.