கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள வானதி சீனிவாசன் – நலமுடன் இருப்பதாகப் பதிவு 

கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டுள்ள வானதி சீனிவாசன் தற்போது நலமுடன் இருப்பதாகத் தனது X வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு  கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவராக பதவி வகித்து வருவதால் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களைக் கட்சியில் இணைத்து வருகிறார். இதனிடையே வானதி சீனிவாசன் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.

பின்னர், மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து அவர் கோவை – அவினாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் தற்போது  காய்ச்சல் குறைந்து நலமுடன் இருப்பதாக அவரது X வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “கொரோனா தொற்று காரணமாகக் கோவையிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறேன் காய்ச்சல் குறைந்துள்ளது. மற்ற அறிகுறிகள் காரணமாக சிகிச்சை பெற்று வருகிறேன்.நலமுடன் இருக்கிறேன்.,” எனத் தெரிவித்துள்ளார்.