இந்த மாதம் மகளிர் உரிமைத்தொகை எப்போது வழங்கப்படும்? – வெளியானது தகவல்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை இம்மாதம் முன்கூட்டியே வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என தகவல்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை இம்மாதம் 10ம் தேதிக்குள் பயனாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்க திட்டம் .

மாதந்தோறும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு வங்கி கணக்கில் 15ஆம் தேதி ஆயிரம் ரூபாய்  வழங்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு விண்ணப்பித்து, மகளிர் உரிமை தொகை பெறாத 11 லட்சம் பேர் மேல்முறையீடு செய்திருந்தனர்.

இந்நிலையில் தீபாவளி பண்டிகை நவம்பர் 12ஆம் தேதி வருவதால் முன்கூட்டியே வங்கி கணக்கில் வரவு வைப்பது தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.