கே.பி.ஆர். கலை கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் 

கே.பி.ஆர். கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி, மேலாண்மையியல் புலம்துறை, கிராஸ்க்கில்ஸ் லேர்னிங் சொலுஷன்ஸ் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திடப்பட்டது.

கல்லூரி முதல்வர் கீதா தலைமை வகித்தார். கணினி அறிவியல் துறை புல முதன்மையர் ஷர்மிளா, எஸ். மேலாண்மையியல் புலம் BBA (CA)  துறையின் தலைவர் மற்றும்  இணைப் பேராசிரியர்  நீலிமா ஆகியோர்  முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்  கையெழுத்தானது.

க்ராஸ்கில்ஸ் லேர்னிங் சொல்யூஷன்ஸ் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சரவணன் தங்கவேல் கலந்து கொண்டு  கல்லூரியின் முதல்வரிடம் ஒப்பந்தப் பத்திரத்தை வழங்கினார். இந்த ஒப்பந்தத்தின் மூலம் மாணவர்கள் பல்வேறு மேலாண்மை சார்ந்த நன்மைகளைப் பெறுவார்கள்.

இதில் துறை சார்ந்த பேராசிரியர்கள் மற்றும் மாணவ உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.