இந்துஸ்தான் கல்லூரியில்  மாணவர்களுக்கான திறன் மேம்படுத்தும் செயல்பாடு

இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் கணினி பயன்பாட்டுத் துறை சார்பில் மாணவர்களிடம் வாசிக்கும் திறனை மேம்படுத்தும் வகையில் “செய்தித்தாள் வாசிப்பு” அமர்வை நடத்தினர்.
இம்முயற்சியினை கல்லூரி முதல்வர் ஜெயா மற்றும் கணினி பயன்பாட்டுத் துறையின் துறைத் தலைவர் ஜெயசுதா ஆகியோர் தொடக்கி வைத்து, மாணவர்களிடம் தினமும்  ஒரு மணி நேரம் செய்தித்தாளை வாசிக்கும் பயிற்சியை மேம்படுத்துமாறு ஊக்கமளித்தனர்.