அக்டோபர் 31 க்குள் சொத்துவரி செலுத்தினால் 5% ஊக்கத் தொகை – மாநகராட்சி அறிவிப்பு

2023-24-ம் நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டிற்கான சொத்துவரியினை அக்டோபர் 1 முதல் 31-ம் தேதிக்குள் செலுத்தும் சொத்து உரிமைதாரர்களுக்கு சொத்துவரி தொகையில் 5% ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் செல்வசுரபி (முழு கூடுதல் பொறுப்பு) தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது, மேற்படி சொத்துவரி தொகையினை ரொக்கம், கடன் மற்றும் பற்று அட்டை காசோலை மற்றும் வரைவோலை மூலமாக மாநகராட்சியின் அனைத்து வரி வசூல் மையங்களில் செலுத்தலாம். மேலும் tnurbunepay.tn.gov.in என்ற இணையதள டிஜிட்டல் பரிவர்த்தனை வாயிலாகவும் செலுத்தலாம். மாநகராட்சி பகுதிகளுக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் இந்த வசதியினை முழுமையாக பயன்படுத்தி வரிகளை செலுத்திக்கொள்ளலாம் என்றார்.