கிராமப்புற மற்றும் புறநகர்ப் பகுதி மருத்துவர்களுக்காக கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை சார்பில் கருத்தரங்கம்

கே.எம்.சி.ஹெச். சூலூர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமப்புற மற்றும் புறநகர்ப் பகுதி மருத்துவர்களுக்காக “மெடி அப்டேட்” கருத்தரங்கை நடத்தியது . இதில் அன்றாட மருத்துவ பயிற்சியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து பல்வேறு தலைப்பில் கலந்துரையாடப்பட்டது.

கருத்தரங்கைத் துவக்கி வைத்து, சிறப்புரையாற்றிய கே.எம்.சி.ஹெச். தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் நல்ல ஜி பழனிசாமி, கிராமப்புற மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பணியாற்றும் மருத்துவர்களின் நலனை முன்னிட்டு மருத்துவத் துறையில் ஏற்பட்டு வரும் நவீன முன்னேற்றங்களை அவர்கள் அறிந்துகொள்ள இதுபோன்ற கருத்தரங்குகள் அவர்களுக்கு உதவிக்கரமாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து, மருத்துவமனை  செயல் இயக்குநர் டாக்டர் அருண் பழனிசாமி தனது உரையில் மருத்துவத் துறைகளில் பல்வேறு புதிய மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. நோயாளிகளுக்குத் தரமான மற்றும் மேம்பட்ட மருத்துவ சேவைகளை அளிப்பதற்கு மருத்துவர்கள் அவற்றைப் பற்றி அறிந்திருப்பது அவசியமாகிறது என்றும் இதுபோன்ற கருத்தரங்குகள் மருத்துவர்கள் தங்கள் தொழில் திறமையை மேம்படுத்திக் கொள்ள உதவுவதோடு சக மருத்துவர்களுடன் கலந்துரையாடவும் நல்வாய்ப்பாக அமைகின்றன என்று குறிப்பிட்டார்.

முன்னதாக கே.எம்.சி.ஹெச். மருத்துவ இயக்குநரும், எலும்பு முறிவு ஆலோசகர் மற்றும் எலும்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் ராஜவேலு வரவேற்புரை நிகழ்த்தினார்.

இதில் கிராமப்புற மற்றும் புறநகர்ப் பகுதிகளிலிருந்து 150-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்றனர்.

சமீபத்தில் கேஎம்சிஹெச் சூலூர் மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் இளம் சிசுக்களுக்கான அதிநவீன தீவிர சிகிச்சைப் பிரிவு (NICU), இருதய சிகிச்சைக்கான அதி நவீன கேத்லேப் (Cathlab) மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன் (MRI Scan) ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.