என்.ஜி.பி தொழில்நுட்ப கல்லூரி, பெண்களுக்கான மாநில அளவிலான கைப்பந்து போட்டியை செவ்வாய் மற்றும் புதன் ஆகிய தினங்களில் நடத்தியது. இப்போட்டியை என்.ஜி.பி கல்லூரி செயலாளர் தவமணிதேவி பழனிசாமி துவக்கி வைத்தார். கல்லூரி முதல்வர் பிரபா மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி புவனேஷ்வரன் முன்னிலை வகித்தனர்.
செவ்வாய்கிழமை நாக் அவுட் முறையில் நடைபெற்ற போட்டியில் 8 அணிகள் பங்கேற்று 4 அணிகள் சூப்பர் லீக் போட்டிக்கு தகுதி பெற்றன. புதனன்று சூப்பர் லீக் போட்டி நடைபெற்றது.
இறுதிச்சுற்றில் கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியும் கே.ஜி.ஐ.எஸ்.எல் தொழில்நுட்ப கல்லூரியும் மோதிக்கொண்டன. இதில் கே.பி.ஆர் வெற்றிபெற்று கோப்பையை வென்றது. கே.ஜி.ஐ.எஸ்.எல் கல்லூரி இரண்டாம் இடத்தில் வெற்றிபெற்றது.
ஸ்ரீ ஈஷ்வர் தொழில்நுட்பக் கல்லூரி மூன்றாம் இடத்தையும், குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி நான்காவது இடத்தையும் பெற்றன. பரிசளிப்பு விழாவில் விளையாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு வெற்றிபெற்றவர்களுக்கு பரிசளித்தனர்.