சி.எம்.எஸ் ஓணம் கொண்டாட்டம்

கோயம்புத்தூர் மலையாளி சமாஜம் (சி.எம்.எஸ்) காந்திபுரத்திலுள்ள ஸ்ரீ டீ கோபாலன் நாயர் நினைவு அரங்கதில் ஓணம் பண்டிகையை கொண்டாடியது. இவ்விழாவில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

மேலும் இவ்விழாவில் சி.எம்.எஸ் தலைவர் ராமசந்திரன் பங்கேற்றார்.சி.எம்.எஸ் செயலர் ராஜகோபாலன் இவ்விழாவில் வரவேற்புரை வழங்கினார்.

இந்த விழாவில் சி.எம்.எஸ் துணை தலைவர் விஜயகுமார்,இணை செயலர் எஸ்.என். பிள்ளை ,சந்திரகுமார் பொருளாளர் விஸ்வநாதன், இணை பொருளாளர் ராஜேஷ் உள்ளிடோர் கலந்து கொண்டனர்.

மேலும் இவ்விழாவில் மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்வும் நடைபெற்றது.