போதை பொருள் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழி 2200 பேர் ஏற்பு

கோவை அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தின் தேசிய நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் வெள்ளிக்கிழமையன்று போதை பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்ற உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்த உறுதிமொழியை என்.எஸ்.எஸ் ஒருங்கிணைப்பாளர் டி.ராதா வாசிக்க அனைவரும் உறுதிமொழியை ஏற்றனர்.

இந்த நிகழ்வில் என்.எஸ்.எஸ் தொண்டர்கள் மற்றும் என்.எஸ்.எஸ் திட்ட அலுவலர்கள் உள்ளிட்ட 2200 பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.