கலைஞரை சப்பாத்தியில் வரைந்த ஓவிய கலைஞர்

மறைந்த தமிழக முன்னால் முதல்வரும், தி.மு.க வின் முன்னாள் தலைவருமான மு.கருணாநிதியின் 100வது பிறந்தநாளை தமிழகம் முழுவதும் தி.மு.க கட்சினரும், ஆதரவாளர்களும் கொண்டாடி வருகின்றனர். இதனையடுத்து சப்பாத்தியில் கலைஞர் கருணாநிதி யின் உருவத்தை வரைந்து அசத்தியுள்ளார் கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த UMT ராஜா என்ற கலைஞர்.

சப்பாத்தியில் கலைஞரின் ஓவியத்தை ஒரு சிறிய அளவிலான இரும்பு கம்பியை நெருப்பில் காய்ச்சி அதனை பயன்படுத்தி வரைந்துள்ளார். இதனை வரைந்து முடிப்பதற்கு 3 மணி நேரம் ஆகியுள்ளது.அவர் வரைந்த ஓவியத்தில் கலைஞர் மு.கருணாநிதியின் முகமும், அதன் கீழ் “கலைஞர் 100” என்ற வார்த்தையும் இடம்பெற்றுள்ளது.