குமரகுரு கல்லூரியில் இந்திய கடற்படைக் குழுவின் இசை நிகழ்ச்சி

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு கல்லூரியில் 50 பேர் கொண்ட இந்திய கடற்படைக் குழுவின் இசை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இந்த இசை நிகழ்ச்சி இசை குழுவின் துணை இயக்குனரான லெப்டினன்ட் கமாண்டர் ஆல்ட்ரின் டி அலெக்சாண்டரின் தலைமையில் நடைபெற்றது. மாஸ்டர் தலைமை பெட்டி அதிகாரி, இசைக்கலைஞரான எம்.அந்தோணி ராஜ், உதவியோடு திரைப்பட பாடல்களான நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ பாடல், ஆஸ்கார் விருது பெற்ற ‘நாட்டு நாடு’ பாடல், ‘என்ஜாய் என்ஜாமி’ மற்றும் ‘மல்லிப்பூ’ போன்ற பிரபலமான பாடல்களை இசைத்தனர். இந்த இசைக்குழு பல்வேறு பள்ளிகள், மும்பை செயின்ட் சேவியர் கல்லூரி மற்றும் ஐஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது. மேலும், மால்கள், பொதுத் இடங்கள், கேட்வே ஆஃப் இந்தியா, ஏசியாடிக் சொசைட்டி மற்றும் இந்தியா கேட் போன்ற உட்பட பல அரங்குகளில் பொதுமக்களுக்கு இசைத்துள்ளனர்