ஐஐடி பம்பாய் நடத்திய போட்டியில் கே.பி.ஆர் கல்லூரி சாதனை

ஐஐடி பம்பாய் ‘இயந்திர’ என்ற தலைப்பில் கண்காணிப்பு பணிகளை செய்யும் திறன் கொண்ட ட்ரோனை வடிவமைத்து, உருவாக்கும் ஒரு சர்வதேச போட்டியை அண்மையில் நடத்தியது. இதில் பல்வேறு நாடுகளை சார்ந்த 374 அணிகள் பங்கு பெற்றன. இப்போட்டியில் கே.பி.ஆர் பொறியியல் கல்லூரியின் சார்பில் இரண்டு அணிகள் கலந்துகொண்டது. பல தொழில்நுட்ப சவால்களை எதிர்கொண்டு கே.பி.ஆர் பொறியியல் கல்லூரி மாணவர்களின் முயற்சியினால் முதல் பரிசையும், மூன்றாம் பரிசையும் வென்றனர். கே.பி.ஆர் கல்வி குழுமத்தின் தலைவர் கே.பி.ராமசாமி மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் அகிலா ஆகியோர் வெற்றிபெற்ற மாணவர்களை பாராட்டினர்.