நேரு கல்வி குழுமத்தின்  தலைமைச் செயலாளர் கிருஷ்ணகுமாருக்கு  “தொழில்சார் விருது”

ரோட்டரி  கிளப் கோயம்புத்தூர் ஜெனித் சங்கத்தின் சார்பாக நேரு கல்வி குழுமத்தின் தலைமைச் செயலாளர் மற்றும் நிர்வாக அதிகாரி கிருஷ்ணகுமாருக்குக் கல்விப் பணியில் தொடர்ந்து சாதனை புரிந்து மாணவர்களின் மூலம் தேசத்தை வளர்ச்சியடைச் செய்து வருவதற்காக “தொழில்சார் விருது” (VOCATIONAL EXCELLENCE AWARD) விருது வழங்கப்பட்டது.

விழாவில் சிறப்பு விருந்தினராக 2024 – 2025 ஆண்டுக்கான ரோட்டரி மாவட்டம் 3201, ரோட்டரி சங்கத்தின் கவர்னர் ரோட்டோரியன் சுந்தரவடிவேலு கலந்து கொண்டார்.

நிகழ்விற்கு ரோட்டேரியன் எம்பிஹெச்எஃப் டி தலைவர் வித்ய பிரகாஷ், தலைமை தாங்கினார். மேலும், ரோட்டேரியன் எம்டி எஸ். கோகுல்ராஜ், மாவட்ட இயக்குநர் – ஆர்.டி 3201, எம்பிஹெச்எஃப் ரோட்டேரியனும் நேரு விமானவியல் கல்லூரியின் டீனுமான பாலாஜி, உதவி ஆளுநர், எம்பிஹெச்எஃப் ரோட்டேரியன் முரளி, எம்பிஹெச்எஃப் ரோட்டேரியன் மீனா கோபாலா கிருஷ்ணன் , செயலாளர், எம்பிஹெச்எஃப் ரோட்டேரியன் சுரேஷ்குமார், வோக்கேசனல் சர்வீஸ் தலைவர்  தமிழரசன் ஆகியோர் முக்கிய விருந்தினர்களாகக் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

இதில் நேரு கல்வி குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ஹெச்.என். நாகராஜா, நிதித் துறை மேலாளர் சந்திரன், அனைத்து கல்லூரி முதல்வர்கள்,  துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.