ஆர்.வி.கலைக் கல்லூரியில் சர்வதேச உணவு தின விழா!  

ஆர். வி.கலை அறிவியல் கல்லூரியில் சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு உணவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில்  சர்வதேச உணவு தின விழா அண்மையில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் ரூபா  தலைமை வகித்தார். பசி பட்டினி ஒழிந்து மக்களுக்கு உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காகக் கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள்  உணவுப் பொட்டலங்கள், பிஸ்கட் மற்றும் ரொட்டித்துண்டுகள் கொண்டு வந்தனர். அதனை, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்குச் சென்று அங்குள்ள நோயாளிகளுடன் இருக்கக்கூடிய உறவினர்கள் மற்றும் மருத்துவமனைப் பகுதிகளில் உள்ள நலிந்தவர்களுக்கு உணவுகளைப் பகிர்ந்து வழங்கினர்.

இந்நிகழ்வின் ஏற்பாடுகளைக் கல்லூரியின் கணிதவியல் துறைத் தலைவர் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் உமாபிரியா  மற்றும் உடற்கல்வி ஆசிரியர் அன்பரசன் செய்திருந்தனர். இந்நிகழ்வு உணவின்றித் தவிக்கும் ஏழை மக்களுக்கு உதவும் வகையில் அமைந்திருந்தது.