சிறுவாணி அணைக்கு தண்ணீர் வரத் தொடங்கியது.

கோவை மாநகரில் 26 வார்டுகள், 20-க்கும் மேற்பட்ட நகரையொட்டிய கிராமங்களுக்கு நீராதார மாக சிறுவாணி அணை விளங்கு கிறது. 49.50 அடி கொள்ள ளவு கொண்ட இந்த அணையில் இருந்து குடிநீருக்காக 10 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்ப ட்டு வந்தது. வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்ததால் கட ந்த பிப்ரவரி மாதத்தின் இறுதியில் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறையத் தொடங்கியது. ஏப்ரல், மே மாதங்களில் அணையின் நீர்மட்டம் 5 அடிக்கு கீழ் குறைந்தது.

இந்நிலையில் கேரளத்தில், தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாள்களாக 15 மி.மீ முதல் 20 மி.மீ வரை மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு செல்லும் முக்தியாறு, பட்டியலாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ள்ளது.

இது குறித்து மாநகராட்சி ஆணையர் பிரதாப் கூறியதாவது:- சிறுவாணி அணையின் நீர்மட்டம் வெகுவாக குறை ந்தாலும் சிறுவாணியில் உள்ள பழமையான தடுப்ப ணையில் 3 அடிக்கு உள்ள தண்ணீர் மூலம் குடிநீர் விநியோகம் தடைபடாமல் வழங்க ஏற்பாடு செய்யப்ப ட்டது.

தற்போது கேரளத்தில் பருவமழை தொ டங்கி யுள்ளதால் அணை யின் நீர்மட்டம் உயரத் தொடங்கியுள்ளது. வரும் நாள்களில் பருவ மழை தீவிரமடைந்து அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தால் குடிநீருக்காக எடுக்கப்படும் நீரின் அளவு அதிகரி க்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்