செய்வினை, தோஷங்களை நீக்கும் கோவை ஸ்ரீ விஷ்ணுமாயா கோவில்!

கேரள மக்களால் குட்டி சாத்தன் என்று அழைக்கப்படும் தெய்வம் விஷ்ணுமாயா சுவாமி. சாத்தன் என்றால் பாலகன் என்று பொருள். சிறு பிள்ளை வடிவில் அமர்ந்து அருள்பாலிக்கும் இந்த விஷ்ணுமாயா சுவாமி சங்கடங்கள், தோஷங்கள் போன்ற தடைகளை தீர்த்து வைப்பார் என்பது மக்களின் நம்பிக்கை.

ஸ்ரீ பேச்சியம்மன் மற்றும் விஷ்ணுமாயா ஒருசேர அருள்பாலிக்கும் கோவில் கோவை சுண்டக்காமுத்தூரில் அமைந்துள்ளது. இக்கோவில் தமிழகத்தில் வேறு எங்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது . எனவே இங்கு தினமும் திரளான பக்தர்கள் அம்மனை தரிசிக்க வந்து செல்கின்றனர்.

இக்கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களின், வேண்டுதல்களுக்கு உடனுக்குடன், நிவர்த்தி கிடைக்கும் வகையில் அம்மன் பக்தர்கள் மத்தியில், நன்மதிப்பைப் பெற்றுள்ளார். கல்யாண காரியம், குழந்தை பாக்கியம், செவ்வாய் தோஷம், சனி தோஷம், பல கிரக தோஷங்களும், செய்வினை தோஷங்களும், மற்றும் திருமணத் தடை தோஷம், தொழில் விருத்தி என பல்வேறு தடைகள் அம்மனின் அருளால் பக்தர்களுக்கு நீங்குவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

இங்கு சனிக்கிழமை தோறும் மதியம் 1 மணியளவில் சிறப்புப் பூஜைகளும், அன்னதானமும் நடைபெறும். பக்தர்களின் வேண்டுதல்களுக்கு ஏற்ற பரிகாரங்களை செய்யும் பொழுது அவர்களின் குறைகள் முற்றிலும் நீங்கி, வாழ்வில் மகிழ்ச்சி, மன நிறைவு அடைகின்றனர்.

அமாவாசை நாளில் ஸ்ரீ விஷ்ணுமாயா சுவாமிக்கு குருதி புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி மற்றும் பவுர்ணமி அன்று சாத்திக பூஜை நடைபெறும், அதில் கலந்து கொள்ளும் பக்தர்கள் நினைக்கும் காரியங்கள்  நிவர்த்தி அடையும் எனக் கூறப்படுகிறது.