ரூபாய் நோட்டில் அதிசிய சின்னம்

பழைய 100 ரூபாய் நோட்டுகளை விட நீல நிற புதிய நோட்கள் தான் அதிகம் புழக்கத்தில் உள்ளது. அந்த நோட்டின்   பின்புறத்தில் உள்ள சின்னம் பாரம்பரியமான கலை மற்றும் பண்பாட்டு சின்னமான ராணியின் கிணறு இடம் பெற்றிக்கும்.

1.1960 ஆம் ஆண்டு தொல்லியல் துறையால் இந்த கிணறு கண்டுபிடிக்கப்பட்டது.

2.இக்கிணற்றைச் சுற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு விஷக்காய்ச்சல் நீக்கும் ஆயுர்வேத மருத்துவக் குணம் கொண்ட செடி, கொடிகள் வளர்க்கப்பட்டு வந்தது என்று கூறப்படுகிறது.

3.இந்த கிணறு இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள பதான் என்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு படிக்கிணறு.

4.22 ஜூன் 2014 அன்று நூற்றுக்கணக்கான படிகள் கொண்ட இந்த கிணற்றை இந்தியாவின் உலக பாரம்பரியமான தளங்களில் ஒன்றாக யுனெஸ்கோ அறிவித்தது.

5.இந்த கிணறு ராணி உதயமதியால் நிறுவப்பட்டதால் ராணியின் கிணறு என்று அழைக்கப்பட்டது. காலப்போக்கில் இந்த கிணறு கற்களாலும் மணலாலும் மூடப்பட்டுவிட்டது. இதனால் பலர்க்கு இந்த கிணற்றை பற்றி தெரியாமலே போய்விட்டது.

6.இந்த கிணற்றின் பக்கவாட்டுச் சுவர்களில், காளி, ராமர், கிருஷ்ணர், நரசிம்மர், கல்கி, மகிசாசூரனை வென்ற மகிசாசூரமர்தினி, வாமனர், 16 வகையான கலைநயத்துடன் கூடிய அழகிய தேவலோக தேவதைகள் என 800 -க்கும் மேற்பட்ட அழகிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

7.கௌதம புத்தர், சாதுக்கள்,திருபாற்கடலில் ஆதிசேசன்மீது பள்ளி கொண்டுள்ள விஷ்ணுவின் பத்து அவதாரங்கள் கொண்ட சிற்பங்கள் அமைந்துள்ளன.

8.இந்த ராணியின் கிணறு நீர் சேமிக்கும் இடமாக மட்டுமல்லாமல் குஜராத் மக்களின் ஆன்மீகத் தலமாகவும் விளங்கியுள்ளது.

 

 

– கோமதிதேவி. பா