முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததானம் 

தமிழ்நாடு முதலமைச்சரின்  71 வது பிறந்த நாளை முன்னிட்டு, கோவை மாநகர் மாவட்ட திமுக மற்றும்  தளபதி இரத்ததான இயக்கம் சார்பில், கோவை அரசு மருத்துவமனைக்கு இரத்த தானம் வழங்கும் முகாம் நடைபெற்றது. வரதராஜபுரம் சாய் விவாகா மகாலில் நடைபெற்ற நிகழ்விற்கு கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக்‌ ex.எம்எல்ஏ., தலைமை வகித்தார்.

இதில் கழக சொத்துப் பாதுகாப்பு குழு துணைத் தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி, கோவை மாநகர்  மாவட்ட திமுக கழக துணைச் செயலாளர்கள் கோட்டை அப்பாஸ், கல்பனா செந்தில், பொருளாளர் எஸ்.எம்.பி.முருகன், தலைமைக் கழக நிர்வாகிகள் பி.நாச்சிமுத்து, பூத் கமிட்டி ‌உறுப்பினர்கள், கழகத் தொண்டர்கள், கழக செயல்வீரர்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.