என்.ஜி.பி கல்லூரியில் “தேசிய இளைஞர் பாராளுமன்றம்” நிகழ்வு 

டாக்டர் என்.ஜி.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சர்வதேச வணிகவியல் துறை சார்பாக “தேசிய இளைஞர் பாராளுமன்றம் 2024”  நிகழ்வை நடத்தினர்.

நிகழ்வினை வழக்கறிஞர் பாலசுப்ரமணியன் துவக்கி வைத்தார், கல்லூரி முதல்வர் ராமமூர்த்தி தலைமையுரை நிகழ்த்தினார்.

மாணவர்கள் கலாச்சாரம், திறன் மேம்பாடு, வர்த்தகம், விவசாயம், வெளியுறவுத் துறை, நிதி, பாதுகாப்பு, உள்துறை, சுகாதாரம், கல்வி அமைச்சர்களாகவும் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களாக பல்வேறு துறைகளைப் பற்றி விவாதங்கள் நடைபெற்றன. இந்த நாடாளுமன்ற அமர்வில் சுமார் 55 மாணவர்கள் கலந்து கொண்டனர்.