தி.மு.க. இளைஞர் அணிக்கான நேர்காணல்!

கோவை 5வது மண்டல தி.மு.க. இளைஞர் அணி பொறுப்புகளுக்கான நேர்காணல் சுகுணா மினிஹாலில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நேர்காணலானது, தி.மு.க  தலைவர்  மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க, கழக இளைஞர் அணி செயலாளர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, தி.மு.க. இளைஞர் அணி துணை செயலாளர்கள் ஜோயல்,  இன்பா ஏ.என்.ரகு, இளையராஜா, அப்துல்மாலிக், பிரகாஷ், பிரபு, சீனிவாசன், பிரதீப்ராஜா, ஆனந்தகுமார் ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது.

கோவை மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர், பகுதி, அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட பொறுப்புகளுக்காக நடைபெற்ற இதில், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக், கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் தொ. அ. ரவி, கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் முருகேசன், மாநகர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தனபால், வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஹக்கீம், தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சபரி கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.