டாக்டர் என்.ஜி.பி. கல்லூரியில் தொழில் முனைவோருக்கான போட்டி

டாக்டர் என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரியில் தொழில் முனைவோருக்கான போட்டி  வணிக கணினி ஆய்வகத்தில் நடைபெற்றது.
நிகழ்விற்குக்  கல்லூரி முதல்வர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். இப்போட்டியில்  என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரியில்  பயிலும் அனைத்துத் துறை மாணவர்களும் கலந்து கொண்டு, எதிர்காலத்தில் தாங்கள் தொடங்கவுள்ள தொழில் முறை யுக்திகளைத் தொகுத்து காணொளிக் காட்சி வாயிலாக தங்கள் திறமைகளை வெளிக் கொணர்ந்தனர். முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசு வழங்கப்பட்டது.
இதில் கல்லூரியின் உயிர்த்தொழில்நுட்பவியல் பேராசிரியர் கதிரவன், சண்முக வடிவு  மற்றும் கணினித்துறைப் பேராசிரியர் செந்தில்குமார், பன்னாட்டு வணிகத்துறைப் பேராசிரியர் மோகன்ராஜ் ஆகியோர்  பங்கேற்றனர்.