கோவையில் ஈட்ரைட் மில்லட் பைக்கத்தான்

சிறுதானிய ஆண்டை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற ஈட்ரைட் மில்லட் பைக்கத்தான் என்ற விழிப்புணர்வு இருசக்கர பேரணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

சிறுதானிய ஆண்டை முன்னிட்டு அரசு சார்பிலும் பல்வேறு தனியார் நிறுவனங்கள் சார்பிலும் இந்த ஆண்டு முழுவதும் தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து துறை, ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி இணைந்து சிறுதானியங்களின் ஊட்டச்சத்து நன்மைகளை  எடுத்துரைக்கும் வகையில் ஈட்ரைட் மில்லட் பைக்கத்தான் என்ற இருசக்கர விழிப்புணர்வு பேரணி நடத்தினர். இந்தப் பேரணியை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திக்குமார் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி உக்கடம் பொள்ளாச்சி வழியாக சக்தி கல்லூரியை சென்றடைகிறது. இதில் 15க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் கல்லூரி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற துவக்க நிகழ்வில் உணவு பாதுகாப்புத் துறை கோவை மாவட்ட நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன், சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி தலைவர் தங்கவேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.