கூகுள்பே பயனாளிகளுக்குக் கூகுள் கொடுத்த எச்சரிக்கை இதோ… 

கூகுள்பே பயன்படுத்தும்போது  திரைப் பகிர்வு போன்ற செயலிகளைப் பயன்படுத்த வேண்டாம் என கூகுள் நிறுவனம் எச்சரித்துள்ளது.

UPI ட்ரான்ஸாக்ஷன்களை பொறுத்தவரை, கூகுள் பே மிகவும் நம்பகமான மற்றும் பாதுகாப்பான செயலியாக பயனாளர்களிடையே கருதப்படுகிறது. இதன் காரணமாக மக்களிடையே அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு பிரபலமாக இருந்து வருகிறது. இத்தகைய பாதுகாப்பை உறுதி செய்வதற்கு கூகுள் பே செயற்கை நுண்ணறிவு  மற்றும் மோசடி தடுப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. இது போன்ற நடவடிக்கைகள் மூலமாக அன்றாடம் நடைபெறக்கூடிய மோசடி ட்ரான்ஸ்ஷாக்ஷன்களை கூகுள் பே அடையாளம் காண்கிறது.

எனினும் இது எல்லா நேரத்திலும் பயன்படாது. சில சமயங்களில் மோசக்காரர்கள் உங்களது வங்கி விவரங்களைப் பெறுவதற்காகத் திரை பகிர்வு  போன்ற ஒரு சில செயலிகளை பயன்படுத்தலாம். கூகுள் பே பயன்படுத்தி பணம் பரிவர்த்தனை செய்யும் போது இது போன்ற செயலிகளைப் பயன்படுத்த வேண்டாம் என கூகுள்பே பயனாளிகளுக்கு அந்நிறுவனம் எச்சரித்துள்ளது.

திரை பகிர்வு போன்ற செயலிகள் மூலம் ஏற்படும் ஆபத்துகள்:

திரை பகிர்வு போன்ற செயலிகள் பணி சூழல்களில் நமக்கு ஒத்துழைப்பு வழங்கினாலும், இதனால் நம் வங்கி விவரங்களை மோசக்காரர்கள் எளிதில் பெறுகின்றனர். “கூகுள் பே ஒருபோதும் பயனாளர்களை தேர்ட் பார்ட்டி செயலிகளை எந்த ஒரு காரணத்திற்காகவும் பதிவிறக்கம் செய்ய சொல்லாது. மேலும், கூகுள் பே பயன்படுத்துவதற்கு முன்பு இது போன்ற செயலிகளை ஏற்கனவே பதிவிறக்கம் செய்திருந்தால் அவற்றை உங்கள் மொபைல் போனில் இருந்து அழிப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

இந்த திரை பகிர்வு போன்ற செயலிகள் மற்றவர்களின் திரையில்  என்ன நடக்கிறது என்பதைக் காணவும், அந்த சாதனத்தின் கட்டுப்பாட்டை எடுக்கவும் கூட பயன்படுத்தப்படலாம். மேலும், உங்களது அனுமதி இல்லாமல் இது போன்ற செயலிகளை மோசக்காரர்கள் பதிவிறக்கம் செய்யும்படி ஏமாற்றலாம்.

எனவே,கூகுள்பே அல்லது மற்ற UPI ட்ரான்ஸாக்ஷன்கள் செயலியைப் பயன்படுத்தும் போது எல்லா திரைப் பகிர்வு செயலிகளை  பயன்படுத்த வேண்டாம் என கூகுள் நிறுவனம் எச்சரித்துள்ளது.