சுற்றுலா பயணிகளுக்கு ஓர் நற்செய்தி!

சுற்றுலா துறையை மேம்படுத்தும் நோக்கில் இந்திய உள்ளிட்ட ஏழு நாடுகளிருந்து இலங்கைக்கு வர விசா தேவையில்லை எனும் புதிய அறிவிப்பை அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்தியா, மலேசிய, ஜப்பான், தாய்லாந்து, இந்தோனேசிய, சீனா,ரஷ்யா ஆகிய நாடுகளிருந்து இலங்கைக்கு செல்ல விசா தேவையில்லை என்ற தீர்மானத்தை இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இத்திட்டத்தை வரும் மார்ச் 31 ஆம் தேதி வரை சோதனை முயற்சியாக அமல்படுத்த உள்ளதாக இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் அலி சப்ரி அறிவித்துள்ளார்.

மேலும், அதிகமான சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு ஈர்ப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாக கருதப்படுகிறது.