எஸ்.என்.எஸ் மாணவர்கள் தேசிய அளவிலான என்.சி.சி கேம்பில் அசத்தல்

எஸ்.என்.எஸ் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களான கிஷோர் மற்றும் மோனாலிசா ஆகிய இருவரும் என்.சி.சி யின் மிகக் கடினமான கேம்பாகக் கருதப்படும் அகில இந்திய தால்ஸைனிக் கேம்பில் வெள்ளி பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.

இந்த கேம்பில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி மற்றும் அந்தமான் நிகோபார் ஒருங்கிணைந்த குழுவின் சார்பாக கலந்துக்கொண்டு ஆரோக்கியம் மற்றும் சுகாதாரப் பிரிவில் கிஷோரும்,  டென்ட் பிட்சிங் பிரிவில் மோனாலிசாவும் வெற்றி பெற்றுள்ளனர்.