இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு விழா

இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மற்றும் இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கல்லூரிகளில் 2023-2024 முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா திங்கட்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவினை, இந்துஸ்தான் கல்வி குழுமங்களின் அறங்காவலர் சரசுவதி கண்ணையன் மற்றும் நிர்வாக செயலாளர்  பிரியா சதிஷ்பிரபு ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

மேலும்,அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன் பேசுகையில், “ஆற்றல் மிக்க மாணவர்களை வழிநடத்தி, தொழில்நுட்பத்தில் சிறந்த இந்தியாவை உருவாக்குவதில் இந்துஸ்தான் கல்லூரி பெரும் பங்கு வகிக்க வேண்டும் “, என வாழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து,  துறைத் தலைவர்கள், துறை சார்ந்த பயிலரங்கம், உபகரணங்கள், கற்பித்தல் முறை, பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் திறமை, புத்தகம் வெளியீடு, காப்புரிமை மற்றும் மேற்படிப்பு, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் அமைந்துள்ள வேலைவாய்ப்புகள் மாணவர்கள் வேலை வாய்ப்பு பயிற்சி மூலம் சேர்ந்த நிறுவனங்களைப் பற்றி எடுத்துக்கூறினர்.

இவ்விழாவிற்கு,இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியின் முதன்மை நிர்வாக அதிகாரி கருணாகரன், கல்லூரி முதல்வர்கள் ஜெயா, நடராஜன், டீன்கள், இயக்குநர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.