கோவையில் மாணவர்களின் அறிவை வளர்க்கும் அறிவியல் பூங்கா.

கோவை மாநகரில் உயிரியல் பூங்கா, தாவரவியல் பூங்கா, மூலிகை பூங்கா, மூத்த குடிமக்கள் பூங்கா, சிறுவர்கள் பூங்கா என பல வகை பூங்காக்கள் உள்ளன இதில் இருந்து முற்றிலும் வேறுபட்டு அறிவியல் ரீதியான கருத்துக்களை பூங்காவுக்கு வரும் மாணவ மாணவிகள் சிறுவர் சிறுமியர்கள் பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் 68 வது வார்டுக்கு உட்பட்ட சிவானந்தா காலனி டாக்டர் அழகப்பன் சாலையில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி கட்டிடத்திற்கு அருகே அறிவியல் பூங்கா புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது

கடந்த 2006- 11 ஆம் ஆண்டுகளில் ரூபாய் 35 லட்சம் மதிப்பிற்குஅரை ஏக்கர் பரப்பளவில் இந்த அறிவியல் பூங்கா ஏற்படுத்தப்பட்டுள்ளது. பின்னர் முறையாக பராமரிப்பு இல்லாததால் முடங்கியது. தற்போது மாநகராட்சி சார்பில் 50 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்டு கடந்த மே மாதம் 8-ம் தேதி அறிவியல் பூங்கா திறக்கப்பட்டது. இப் பூங்காவிற்கு வரும் சிறுவர்கள் சிறுமியர்கள் மாணவ மாணவிகள் பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு அறிவியல் சார்ந்த உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பாக மாநகராட்சி உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

இந்த அறிவியல் பூங்காவின் முன்பு 19 விளையாட்டு உபகரணங்கள் இருந்தன் தற்போது 20 உபகரணங்கள் கூடுதலாக பொருத்தப்பட்டு மொத்தம் 39 அறிவியல் சார்ந்த விளையாட்டு உபகரணங்கள். உள்ளே நுழைந்தவுடன் அறிவியல் ஆராய்ச்சியாளரும் முன்னாள் குடியரசு தலைவர் ஆன அப்துல் கலாமின் உடைய உருவச்சிலை வைக்கப்பட்டுள்ளது.

மேலும் மாற்று திசைகாட்டி கருவி, மணி கோபுரம், காற்று வேக அளவி, ஈரமானி, மழைமானி | ஊஞ்சல் பரவாலயத்தை கடக்கும் நேர் தண்டு, ஆட்டோமொபைல் மாதிரி, நியூட்டன் மூன்றாம் விதி, ஓசையின் திசைவேகம், மைய விளக்குவிசை, பிரமாஸ் கோபுரம் பலவகையான கண்ணாடிகள், தனிம அட்டவணை, அலை இயக்கம்’ பரவளையம், ஆற்றல் கடத்தும் வழிகள், சூரிய மண்டலம், ஜிஎஸ்எல்வி ராக்கெட் மாதிரி, உள்ளிட்ட வகையான உபகரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த உபகரணங்கள் அருகிலேயே அந்த உபகர்ணங்கள் எவ்வாறு இயங்கும் அதன் பயன் என்ன என்பன போன்ற விளக்கங்களும் இடம் பெற்று இருக்கின்றன.

பள்ளி மாணவ மாணவிகள் சிறுவர் சிறுமியர்கள் உள்ளிட்டோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் பூங்காவுக்கு அனுமதி இலவசம் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் சுழற்சி முறையில் மாணவ மாணவிகள் பூங்காவை பார்வையிட வருவார்கள் என எதிர்பார்க்கிறோம்.

தவிர பூங்காவில் உள்ள உபகரணங்கள் குறித்து விளக்க மாநகராட்சி மூலம் தகுந்த நபர்கள் நியமிக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது தற்போது பூங்கா முழு பயன்பாட்டில் உள்ளது.கதவு மட்டும் இறுதி கட்டத்தில் உள்ளது இவ்வாறு அவர் கூறினார்.