கே.பி.ஆர் கல்லூரியில் ‘தேசிய கணித வார விழா’

கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜரை போற்றும் வகையில் கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் தேசிய கணித வார விழா கணிதத் துறையில் நடைபெற்றது. இதனையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் ஸ்ரீனிவாச ராமானுஜன் வாழ்க்கை வரலாறு பற்றிய சிறப்புப் பார்வை, அவருடைய வாழ்க்கை வரலாறு திரைப்பட நிகழ்ச்சி, ஓவியப் போட்டி, கணிதத்தில் புதுமையான யோசனைகள் பற்றிய விளக்கக்காட்சிகள், வினாடி-வினா போட்டி, வேதக் கணிதம் குறித்த பயிற்சிகள் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இவ்விழாவில், மாணவர்களுக்கு ராமானுஜன் வாழ்க்கைப் பற்றியும் அவருடைய பணியைப் பற்றியும் பல தகவல்களை மாணவர்கள் அறிந்து கொண்டனர். இறுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் ராமசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார் அப்போது கணித மேதை ராமானுஜன் கண்டுபிடிப்புகள் பற்றியும், உலகின் கணித துறைக்கு அவர் ஆற்றிய பங்கு பற்றி உரையாற்றினார். பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டது.