ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் ரத்ததான தினம்.

ராயல் கேர் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் க. மாதேஸ்வரன் அவர்களின் தலைமையில் மருத்துவ இயக்குனர் டாக்டர் பரந்தாமன் சேதுபதி ராயல்கேர் ரத்த நிலையத்தின் ரத்தம் கொடுத்து உயிரை காப்பாற்றிய தன்னார்வ ரத்த கொடையாளர்களை பாராட்டி கௌரவப்படுத்தினார்.

விழாவில் ரத்தம் கொடுங்கள், பிளாஸ்மா கொடுங்கள், வாழ்வு கொடுங்கள், அடிக்கடி கொடுங்கள் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது.

மேலும் , விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது 158 முறை ரத்த தானம் செய்த அருண் கோகுல் தாசுக்கு வழங்கப்பட்டது. மற்றும் ரத்ததான ஊக்குவிப்பாளர் கோவை அக்க்ஷித் பவுண்டேஷன் கே.கே. ரவி அவர்களுக்கும் விருது வழங்கப்பட்டது.

விழாவை மருத்துவ ஆய்வகம் மற்றும் ரத்த வங்கி தலைவர் டாக்டர் ப சின்னச்சாமி மற்றும் குருதி ஏற்றல் துறை தலைவர் டாக்டர் ரா. ஜீவப்பிரியா சிறப்பான முறையில் நடத்தினர்.

விழாவில் தன்னார்வ குருதிக்கொடையாளர்கள் மருத்துவர்கள் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.