வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசிடம் வழக்கறிஞர் பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடத்தினர். சமீப காலங்களாக வழக்கறிஞர்கள் மீது தாக்குதல், கொலை வெறி செயல்கள் நடைபெறுவதாகவும், வழக்கறிஞர்களின் உயிருக்கும், தொழிலுக்கும், உடமைகளுக்கும் அச்சுறுத்தல் நிகழ்வதாகவும் இவற்றை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை குழு அமைத்து நிறைவேற்ற வலியுறுத்தி கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற நுழைவாயில் முன்பு அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்